சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு நாளை அனுமதி
கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கடலூர்,
ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.