தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்,பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் .உள் மாவட்டங்களில் ,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில தினங்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும் .