டியூசன் படிக்க வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது

ஆசிரியர் லோகநாதனை மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Update: 2022-01-08 07:07 GMT
அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு டியூசன் சென்டர் நடத்தி வந்தவர் ஆசிரியர் லோகநாதன் (வயது 39 ). இவர் தனது டியூசன் சென்டரில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக  மாணவியின் பெற்றோர்  புகார் அளித்தனர். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் லோகநாதன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ளார்.

தொடர்ந்து இவர் மீது ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் கிருஷ்னுண்ணி ஆசிரியர் லோகநாதனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்