ஜனவரி 12: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-01-12 15:18 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 28,47,589 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 27,21,725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,039  பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 19 பேர் (அரசு மருத்துவமனை - 12, தனியார் மருத்துவமனை - 7) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,905 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 7,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,08,619 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் 1,840 பேருக்கும், கோவையில் 981 பேருக்கும், திருவள்ளூரில் 931 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 620 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 5,89,54,751 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,56,281 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தற்போது 88,959 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16,62,809 பேர் ஆண்கள் (இன்று-10,652 பேர்), 11,84,742 பேர் பெண்கள் (இன்று-7,282 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.






மேலும் செய்திகள்