பொங்கல் பண்டிகையை முன்னிட்டு: 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

Update: 2022-01-12 22:55 GMT
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை ஆகிய பிரிவுகளில் மின்சார ரெயில் மற்றும் பறக்கும் ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்