தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா: 23 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-14 13:51 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 28,91,959 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 27,36,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 9,026 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 26 பேர் (அரசு மருத்துவமனை - 15, தனியார் மருத்துவமனை - 11) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 8,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,92,64,199 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,53,046 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தற்போது 1,18,017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்