தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம்
மாட்டுப்பொங்கலையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
மகர சங்கராந்தி பெருவிழாவான மாட்டுப் பொங்கலையொட்டி இன்று தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய், கனிகள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும் பசு மாட்டிற்கு கோ பூஜையும் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.