மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-01-17 08:03 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார். அவர் தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மாலைக்குள் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்