ஜனவரி 20: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 30,42,796 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 28,26,479 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 19,978 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 39 பேர் (அரசு மருத்துவமனை - 20, தனியார் மருத்துவமனை - 19) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,112 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 7,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,76,147 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவையில் 3,390 பேருக்கும், செங்கல்பட்டில் 2,196 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,148 பேருக்கும், திருவள்ளூரில் 998 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6,01,35,832 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,54,912 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1,79,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 17,77,006 பேர் ஆண்கள் (இன்று-16,234 பேர்), 12,65,752 பேர் பெண்கள் (இன்று-12,327 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.