முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் உள்நோக்கம் இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன்

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

Update: 2022-01-21 03:46 GMT
மதுரை,

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதில் எந்தவித உள்நேக்கமும் இல்லை. உப்புத்தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்புதான். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

பொங்கல் விழாவின்போது தமிழக போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டது. பயணிகளுக்கு இடம் இல்லை, பஸ்கள் கிடைக்கவில்லை என போக்குவரத்து துறை குறித்து எந்த புகாரும் இல்லை. முழு ஊரடங்கின்போதும், பஸ்களை சரியாக அனுப்பியதால் பொதுமக்கள் நிம்மதியாக பயணித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்