கொரோனா பரவல் தடுப்பு, ஊரடங்கு தளர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2022-01-26 22:57 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்படுவதால் அதை குறைத்து எடைபோட முடியாது. இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு; வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் இயங்க தடை போன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதோடு, 31-ந்தேதிவரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆலோசனை

இந்த நிலையில் தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் ஆய்வு செய்வதற்காக இன்று சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம், தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்புகளை வெளியிடுவார்.

மேலும் செய்திகள்