மேலும் ஒருவருக்கு கொரோனா

புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Update: 2022-04-14 17:55 GMT
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 200 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் காரைக்கால் பகுதியில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது 3 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
முதல் தவணை தடுப்பூசியை 781 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,174 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 173 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 61 ஆயிரத்து 305 தடுப்புசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்