தமிழ்நாட்டில் 23 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 528 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2023-12-21 21:58 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 528 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 23 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்