தெலுங்கானாவில் இருந்து 2,515 டன் ரேஷன் அரிசி ரெயிலில் நெல்லை வருகை

தெலுங்கானாவில் இருந்து 2,515 டன் ரேஷன் அரிசி ரெயிலில் நெல்லைக்கு வந்தது.

Update: 2023-01-11 19:32 GMT

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு நேற்று காலையில் 2 ஆயிரத்து 515 டன் ரேஷன் அரிசி கொண்டுவரப்பட்டது. 40 பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட அந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்