2 -வது முறையாக பள்ளி மாணவி கடத்தல்?

உளுந்தூர்பேட்டையில் 2 -வது முறையாக பள்ளி மாணவி கடத்தப்பட்டரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-23 18:35 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி. இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரை எஸ்.மலையனூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 28) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து அந்த மாணவியை மீட்டனர். மேலும் அய்யப்பனை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த மாணவி மளிகைக்கடைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தண்டனை முடிந்து வெளியே வந்த அய்யப்பன் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அவர் மீது மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்