காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்

காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

Update: 2023-09-12 05:11 GMT

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கோவில்கள் சார்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, காஞ்சீபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட தகுதியான 3 மணமக்கள் ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத்தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் மண்டபத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

பின்னர் திருமணம் செய்து கொண்ட 3 ஜோடிகளுக்கும் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்பட்டது.திருமண விழாவில் உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், சுரேஷ் உள்ளிட்டோரும், மணமகன், மணமகள் வீட்டாரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்