கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது

வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளயைடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-22 18:45 GMT

வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தென்னம்பட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது வெல்லமடை பிரிவு அருகே சாலையோரம் சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பியோடினர். அவர்களை விரட்டி மடக்கி பிடித்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் நெல்லை மாவட்டம், சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 31), திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பிலாத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (34), நல்லாண்டவர் (29) என்பதும், அவர்கள் வடமதுரை, அய்யலூர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பதும், ரவுடி பட்டியலில் அவர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்