மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-05 19:06 GMT

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 32) என்பவர் அவரது பெட்டிக்கடையிலும், அதே பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (30) தனது வீட்டின் பின்புறத்திலும், ஆலத்தூர் ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்த குழந்தைவேல் (61) தனது பெட்டிக்கடையிலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து ரமேஷ், ராஜலிங்கம், குழந்தைவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்