காரியாபட்டி,
காரியாபட்டி அருகே சித்து மூன்றடைப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 62). இவர் 3 பவுன் நகையை காரியாபட்டியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கொண்டு வந்து விட்டு பின்னர் மீண்டும் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் பார்த்தபோது தனது பையில் இருந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை. இதுகுறித்து ராஜம்மாள் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.