பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன

Update: 2023-02-13 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று 21 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு கைக்கடிகாரம், 10 பேருக்கு ஊன்றுகோல் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக 319 மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் அந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்