சேலம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-01 20:37 GMT

சேலம், 

சேலம் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 14 பேர், ஓமலூரில் 8 பேர், வீரபாண்டியில் 2 பேர், சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சேலம் மாவட்டத்துக்கு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து வந்த தலா 3 பேரும், நாமக்கல்லில் இருந்து வந்த 2 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்