4 பேர் கைது

வேடசந்தூர் அருகே சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-04 19:00 GMT

வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் உள்ள மணியக்காரன்குளத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்துவதாக வேடசந்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், லாரன்ஸ் (வயது 20), முருகப்பெருமாள் (30), சவேரியார் (30), காளிதாஸ் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்