கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் 4 பேர் சாவு - பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு

கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

Update: 2022-10-04 03:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கியாஸ் சிலிண்டர் வெடிக்க தொடங்கியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே அமோத்குமார் (வயது 25), சந்தியா (21), ஜீவானந்தம் (50) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22) நேற்று முன்தினம் இரவும், தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர்(13), சண்முக பிரியன்(17), கோகுல் (22) ஆகியோர் நேற்றும் என மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் குணால், கியாஸ் சிலிண்டர் குடோனில் வேலை செய்து வந்ததும், கிஷோர் 8-ம் வகுப்பு மாணவர் என்பதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்