வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

கேரம் போர்டு விளையாடும்போது தகராறு ஏற்பட்டதில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-11 19:00 GMT

வடமதுரை அருகே உள்ள புதுக்கலராம்பட்டியை சேர்ந்தவர் பொன்னர் (வயது 25). இவர், கடந்த 9-ந்தேதி அதே பகுதியில் உள்ள நாடகமேடை அருகே தனது நண்பரான தவமணி (24) என்பவருடன் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தவமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து பொன்னரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பொன்னரை அவரது உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன்பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொன்னரின் தந்தை சங்கர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து, தவமணி, சுபாஷ் (27), மகாலட்சுமி (27), பகவதி (19) ஆகிய 4 பேரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்