4 பேர் பிடிபட்டனர்

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த போது 4 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-10-25 21:11 GMT

மதுரை, 

மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தெருக்களில் சிலர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று சாகசம் செய்வதை கேமரா மற்றும் செல்போனில் படம் எடுத்து கொண்டிருந்தனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த இப்ராகிம் (வயது 28), பாலமேடுவை சேர்ந்த வெற்றிவேல் (21), காளவாசல் வினோத் (28), புதூர் பகுதியை சேர்ந்த ராகுல் (21) என்பதும், அவர்கள் கேமரா மூலம் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதை படம் எடுத்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள், 2 கேமரா, 5 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்