சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-04 19:43 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம், சோழங்குறிச்சி சாலையில் அய்யனார் கோவில் அருகில் உடையார்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(வயது 53), ராஜா(48), ராஜேந்திரன்(58), மணிகண்டன்(41) மற்றும் மாரியப்பன்(36) ஆகிய 5 பேரும் சூதாடியது தெரியவந்தது. அவர்களை மடக்கி பிடித்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்