காரில் கடத்திய 560 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கடையநல்லூரில் காரில் கடத்திய 560 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-10-10 00:37 IST

கடையநல்லூர்:

நெல்லை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் கடையநல்லூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், 560 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. காரில் வந்தவர் தப்பி ஓடி விட்டார். உடனே போலீசார் ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சாமி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்