பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் மாவடியன் கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 27), மதன் (25), லட்சுமணன் (27), ஷேக் பரீத் (25), ராஜேஷ் (42), நவீன்குமார் (22), மணிகண்டன் (27) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.