கடையில் 900 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருக்கோவிலூரில் கடையில் 900 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் தெற்கு தெருவை சேர்ந்த பத்ரி நாராயணன்(வயது 45) என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 900 பாக்கெட் புகையிலை பொருட்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பத்ரி நாராயணன் கைது செய்யப்பட்டார்.