பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-10 19:48 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் பிரசாந்த்(வயது 28). ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இவர், 14 வயதுடைய ஒரு பள்ளி மாணவியை நோட்டமட்டதாகவும், சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி பஸ்சில் பள்ளி சென்றபோது, அவருக்கு பிரசாந்த் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தினர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்