மொபட் மீது கார் மோதியது; பெண் பலி

மொபட் மீது கார் மோதியது; பெண் பலி

Update: 2022-07-14 19:26 GMT

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே கூலாண்டிபட்டியை சேர்ந்தவர் சேது(வயது 47). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் அவரது தாயார் முத்துலட்சுமியை பார்ப்பதற்காக சொந்த ஊரான கூலாண்டிபட்டிக்கு அவரது மனைவி சுசிலா(45) மற்றும் மகள்கள் சிவசக்தி(16), வீர சின்னம்மாள் (13) ஆகியோரை அழைத்துக் கொண்டு மொபட்டில் வந்தார். பின்னர் தாயாரை பார்த்துவிட்டு மீண்டும் நிலக்கோட்டை செல்வதற்காக வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் சேது, சுசீலா, சிவசக்தி, வீர சின்னம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தில் சுசிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்