தைல மரக்காட்டில் தீ விபத்து

தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2023-01-26 23:58 IST

இலுப்பூர் அருகே வெள்ளைமரியால் கோவில் பகுதியில் பிரேம்குமார், மாரியப்பன் ஆகியோருக்கு சொந்தமாக தைல மரக்காடுகள் உள்ளது. இந்நிலையில் தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்றனர். தைல மரக்காட்டு பகுதியில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் வீரர்கள் செடிகளை கொண்டு தீயை அணைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்