பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சம்

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

Update: 2023-05-17 18:45 GMT

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

காதல் திருமணம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள நிலையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகள் சரிதா (வயது 24). பி.எஸ்.சி., பி.எட்., படித்துள்ளார். இவரும் அறந்தாங்கி தாலுகா மணக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த சின்னையா மகன் சிவானந்தம் (24) என்பவரும் பள்ளியில் படிக்கும் நாள் முதல் காதலித்து வந்துள்ளனர். சிவானந்தம் பி.சி.ஏ. படித்துவிட்டு லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களின் காதலுக்கு சரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். சரிதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரிதா மற்றும் சிவானந்தம் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.

போலீசில் தஞ்சம்

இதன்பின்னர் இவர்கள் இருவரும் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் தாங்கள் இருவரும் சேர்ந்துவாழ முடிவு செய்துள்ளதாகவும் தங்களுக்கு பெற்றோர் தரப்பில் அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் காணவில்லை என புகார் பெறப்பட்டுள்ளதா? என விசாரித்து காதல் ஜோடியின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்