ஆவடி அருகே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் பருத்திப்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-05-24 04:26 GMT

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாலாஜி. இவருடைய மனைவி மலர். இருவரும் டாக்டர்களாக உள்ளனர். இவர்களுடைய மகன் லோக்நாத் (வயது 17).

திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் படித்து தேர்ச்சி பெற்ற லோக்நாத்தை, தற்போது பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ப்பதற்காக 2 மாதத்துக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிவந்துள்ளனர்.

லோக்நாத் கால்பந்தாட்ட வீரர் என கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது ஆங்காங்கே எகிறி குதித்து விளையாடிக் கொண்டே இருப்பார் என தெரிகிறது.

நேற்று மாலை லோக்நாத், தனது வீட்டின் 2-வது மாடியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது நிலைதடுமாறி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த லோக்நாத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படு்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்