அனாதை பிணத்தை அடக்கம் செய்த பள்ளி மாணவன்

ஆற்காட்டில் அனாதை பிணத்தை பள்ளி மாணவன் அடக்கம் செய்தான்.;

Update:2023-09-25 23:51 IST

ஆற்காடு அடுத்த தாஜ்புரா அருகே சாலையோரம் பிச்சை எடுத்து வசித்து வந்த 60 வயது முதியவர் இறந்து விட்டார். அவரது உடல் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. 15 நாட்கள் ஆகியும் உறவினர்கள் யாரும் வராததால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

ஆற்காடு பகுதியை சேர்ந்த சமூக சேவகரும், தன்னார்வலருமான எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியனின் மகன் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.ஆர்.பி.பி.தாருகேஷன் பொதுமக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன், அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்தார். அனாதை பிணத்தை அடக்கம் செய்த பள்ளி மாணவனை சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்