டாஸ்மாக் கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

ஏற்காட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-05 04:07 GMT

ஏற்காடு,

ஏற்காட்டின் போட்டு காடு கிராமம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறந்த போது, ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கடையை மூடிவிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .

உடனடியாக, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், மது பெட்டிகளுக்கு இடையே சிக்கி இருந்த சாரை பாம்பை மீட்டனர். இதனால், மதுப்பிரியர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்