கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற வாலிபருக்கு சூடு வைத்த கொடூரம்

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற வாலிபருக்கு சூடு வைத்த நண்பர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-12 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே உள்ள காரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை. இவருடைய மகன் பூவரசன் (வயது 21). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவரும் நண்பர்கள். இதனால் பூவரசன் அடிக்கடி அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது பூவரசனுக்கும், அஜித்குமாரின் அண்ணன் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த அஜித்குமார், தனது அண்ணியுடனான பழக்கத்தை கைவிடுமாறு நண்பரிடம் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் அவர் கேட்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார்.

உடலில் சூடு வைத்தனர்

இந்த நிலையில் பூவரசன் வழக்கம்போல் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அஜித்குமார், தனது நண்பர்கள் தமிழ்செல்வன், ராம்குமார் ஆகியோருடன் சென்று பூவரசனை பிடித்து தர்ம அடி கொடுத்தனா். பின்னர் அவரது உடலில் சூடு வைத்தனர். இது பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு, அவரை விடுவித்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் பலத்த காயமடைந்த பூவரசன், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் அஜித்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்