சென்னை புழலில் உள்ள ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து

10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-01-13 01:22 GMT

சென்னை,

சென்னை, புழல் - அம்பத்தூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக், ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மூலப்பொருட்கள் அடங்கிய ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள், உடை, வாகன டயர்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின.

இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்