காதல் திருமணம் செய்த பெண் மாயம்

காதல் திருமணம் செய்த பெண் மாயமானார்.

Update: 2022-11-22 19:42 GMT

திருவானைக்காவல் மேலகொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 29). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் வைஷாலி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 20-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வைஷாலி வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்