விக்கிரவாண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

விக்கிரவாண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-09-02 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் காலனியை சேர்ந்தவர் திருமலை கம்பன்(வயது 30). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சந்தியா(27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சந்தியா நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்