இளம்பெண் மாயம்

தியாகதுருகம் அருகே இளம்பெண் மாயமானாா்.

Update: 2023-04-30 18:45 GMT

தியாகதுருகம்:

தியாகதுருகம் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவரது மகள் அனுராதா (23). இவர் கடந்த 29-ந் தேதி விருத்தாசலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அனுராதா கிடைக்கவில்லை. இது குறித்து அனுராதாவின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்