கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலியானார்.;

Update:2023-05-07 00:15 IST

பரமக்குடி, 

பரமக்குடி அருகே உள்ள காமன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 70). சம்பவத்தன்று இவர் சத்திரக்குடி பஜாரில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவருடைய மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அழகர்சாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்