விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் சாவு

விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.

Update: 2023-05-19 18:45 GMT

மதுரை மேலூரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 20). இவர், மதுரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விரகனூர் ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சந்தோஷ் மீது எதிர்பாராதவிதமாக மோதினர். இதில் சந்தோஷ் உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த விஷ்ணு, சந்தோஷ்குமார், லோகேஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து சிலைமான் போலீசார் செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்