திருப்பதி அருகே டேங்கர் லாரியுடன் கார் மோதி விபத்து: சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

திருப்பதி அருகே டேங்கர் லாரியுடன் கார் மோதி விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

Update: 2023-03-12 07:52 GMT

திருப்பதி,

திருப்பதிக்கு சென்னையை சேர்ந்த நபர்கள் மூன்று பேர் காரில் புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற கார் நகரி அருகே தர்மபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பதியில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நகரி நோக்கி வந்தது. தர்மபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நகரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பொதுமக்களும், போலீசாரும் சேர்ந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்