அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி

கிள்ளை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-07-03 17:00 GMT

பரங்கிப்பேட்டை, 

கிள்ளை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தரராஜன், வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் சேர வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர். பின்னர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரசு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். விழாவில் பள்ளிஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்