அருந்ததியர் மக்கள் நலப் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

அருந்ததியர் மக்கள் நலப் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-25 19:15 GMT

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அனைத்து அருந்ததியர் மக்கள் நலப்பேரவை சார்பில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ேபரவை பொதுச்செயலாளர் துரை.பாலகுரு தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தமிழர் பூர்வ குடிகளான அருந்ததிய சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக கூறியும், சீமானை கைது செய்யக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்