வேளாண் கல்லூரி மாணவிகள் கள பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கள பயிற்சி நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில்

Update: 2023-01-24 18:45 GMT

நீடாமங்கலம்:

திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் நீடாமங்கலம் வேளாண்மை கோட்டம் கருவாக்குறிச்சியில் களப்பயிற்சி மேற்கொண்டனர். அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள் கருவாக்குறிச்சியில் உள்ள கொள்முதல் நிலையம் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தில் பயிற்சி மேற்கொண்டனர். 40 ஆண்டுகளாக இயங்கி வரும் கொள்முதல் நிலையம், . ஈரப்பதம் அளவிடும் எந்திரம் மூலம் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் அளக்கப்படுவது, விதை சேமிப்பு அறை போன்றவற்றை மாணவிகள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்