சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-03 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக வாசுதேவநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வாசுதேவநல்லூர் அருகே வேலாயுதபுரம் குருசுமலைக்கு வடபுறம் புளியந்தோப்பில் ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார் 11 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் பாத்திரங்கள், பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டி.ராமநாதபுரம் நந்தவன தெருவை சேர்ந்த சமுத்திரபாண்டியன் மகன் மாரிமுத்து (வயது 38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்