சாராயம் காய்ச்சியவர் கைது

கந்திலி அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-25 17:16 GMT

கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 49). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் சாராயம்காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கந்திலி போலீசார் சென்று குபேந்திரன் வீட்டின் பின்புறத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அங்கு சாராய ஊறல்கள் இருந்ததை கண்டுபிடித்து ஆயிரம் லிட்டர் ஊறலை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அழித்தனர். மேலும் இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட அடுப்பு, சிலிண்டர் மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் குபேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்