முன்விரோதம் காரணமாக அ.ம.மு.க. கவுன்சிலரை தாக்கியவர் கைது

முன்விரோதம் காரணமாக அ.ம.மு.க. கவுன்சிலரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-17 00:10 IST

வளவனூர், 

விழுப்புரம் அருகே வளவனூர் ஜெகநாதீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கந்தன் (வயது 35). அ.ம.மு.க. பிரமுகரான இவர் வளவனூர் பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் தனது நண்பர் அய்யப்பனின் மோட்டார் சைக்கிளில் சென்றபோது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முருகன் (45), அவரது மனைவி லதா (42) ஆகிய இருவரும் சேர்ந்து கந்தனை வழிமறித்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கந்தன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் முருகன், லதா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்